Thursday, 3 June 2010

நட்பு !


நட்பு !

உடனிருந்த காலத்தில்
கருத்துப் போர்!
இல்லாத நாள் அது
திருநாள்.
நட்பின் இயக்கம் அது
வேறுபாட்டில் - ஒரு
ஞானியின் கருத்து!
கருத்து வேறுபாட்டிலேயே
இயங்கிய நட்பு - பிரிவில்
உணர்த்தியது அவளென் சகஊழியை
மட்டுமல்ல! சற்று மேலே என்று!
-சக்தி

சகஜமானதே!


சகஜமானதே!
காத்திருந்தேன் பல மாதங்கள்
என்னவள் கண்ணசைக்க!
காத்திருந்தேன் பல வாரங்கள்
மென்னவள் புன்னகைக்க!
ஆனது காதல் பரிமாற்றம்
சொல்லதில் அல்ல - உணர்வதில்!
மலையென கனத்து உயர்ந்து நின்று
சரிவில் வாட்டியது வாழ்வை!
உருக்கியது உயிரை! இன்றோ
மூன்றே நாள் முதிர்ந்த காதல்
ஊடலின் வெதுவெதுப்பில்
பொசுங்க உதயமாகிறது
புதுக்காதல் காதலியின் தோழியுடன்!
சகஜமானதே! காதல் தோல்வியும்!
-சக்தி

அதிர்வு!


அதிர்வு!

அவன் இதயத்துள் துடிக்கும்

அவள் இதய அதிர்வை அவளும்

அவள் இதயத்துள் துடிக்கும்

அவன் இதய அதிர்வை அவனும்

உணர உணரப்பட்டது உண்மைக் காதல்!

இவ்வற்புத உணர்வு பரிமாற்றத்தில்

குரல்வளையதிர்வின் தேவையேன்?

-சக்தி

பார்த்துக்கொள்!


பார்த்துக்கொள்!

சற்றேமுன் பிடுங்கி
எறிந்த ஆலவிருட்ச சுவடானது - என் உள்ளம்
உண்மைதான் பிடுங்கி எறியப்பட்டது
ஆலவிருட்சம் அல்ல - என் காதல் விருட்சம்
உயிர் பிரியும் வலியையும்
தாங்கி இருந்தேன் - என்னுடன் பிறந்த
நண்பர்களும் அறியா வண்ணம்!
விதை(ளை)தத்தவன் நீ - கால மருத்துவனே
அழகு தமிழால் மருந்து போடு!
இனிய கவியால் மருந்து போடு!
என் உள ரணம்
ஆரும்வரை பார்த்துக்கொள்!
இன்னொரு உள்ளம்
ரணமாகாமல் பார்த்துக்கொள்!
-சக்தி

உயர்வில் சரிவு!


உயர்வில் சரிவு!

மழலையாய் கழித்த காலங்கள் - அது

நினைவில் இல்லை - நிழலாடும் கற்பனையில்

சலிக்காமல் நினைக்கும் அ(ம்மா)ப்பாவின்

கொஞ்சலுக்கிடையில்!

சிறுவனாய் கடந்த பருவம் - சிறிய

குருவிக் குடும்பம் - மனதில்

போட்டு வைத்த பதியம்!

கூட்டுக்கு அது ஒரு வாயில்

ஈட்டிய லட்சுமி போவதற்கோ

பலவாயில்!

எங்கஊரு ரேசன் கடையிலே

உளுத்த அரிசி வாசனைச் சோறு

அள்ளித்தின்ன அறியா வயசு

மகிழ்ச்சி பெருக்காய் நெஞ்சுக்குள்ளே!

மலைமேல் மண்சரிய

உருண்டோடிய பாறையாய்

உருண்ட காலச்சக்கரத்தில் - கிடைத்தது

பட்டறிவும் படிப்பறிவும் விழித்துழைக்க

முத்தென தொழிழாக்கி

உரியது சில ஆக்கி - நின்ற போதினிலே

சரிந்து கிடந்தது குருவிக்கூட்டு மகிழ்ச்சி!

பிரபஞ்ச விரிவாக்க விதிபோல

மனித மனமும் விரிந்து கொண்டும்

ஒன்றைவிட்டு ஒன்று விலகிக்கொண்டும்

போகும் போலும்!

-சக்தி

ஏற்கமறுக்கிறதே ஏன் ?




ஏற்கமறுக்கிறதே ஏன் ?

நீ விரும்பிய ஒன்று - கிடைக்காமல்

போவதுஅதைவிட சிறந்த ஒன்று கிடைப்பதற்கே!

என் வாழ்நாளில் நானே உணர்ந்தபின்னும்

கண்ணே! உன் விஷயத்தில் மட்டும் - மனம்

ஏற்கமறுக்கிறதே ஏன் ?


-சக்தி

காலம் கடந்த பாடம்!


காலம் கடந்த பாடம்!

அவன் பார்வையில் மாயை(காதல்) படர
ஆனது அவள் எச்சில் குமிழியும்
ரசனைக்குரியதாக !

தந்தையை ஏய்த்து விட்டு வந்தாள்
தன்னை பார்க்க - மகிழ்ந்தான்!
தன் சிநேகிதத்தை பொய்யால்
சமாளிக்க - ரசித்தான்!
நேர்க்கொண்ட நோக்கில்லா(ததை)
நளினமென - உவந்தான்!
மிகப் பிடித்த பிடிவாதம்
அவளுக்குரியமிடுக்காய் - உணர்ந்தான்!
செய்த பணவிரயம் தன்னுடனான
காலவிரயத்துக்கே - என்றெண்ணினான்!
உற்றார் உறவினரை எதிர்த்து
மணமுடித்து - மகிழ்ந்தான்!
மனைவியான காதலியின்
சுயவியல்புகளால் - சிந்தித்தான்!
தவறான விஷயங்கள் மட்டுமே
தெரிந்திருக்கிறது - மிக அழகாக!

யதார்த்தம் தைரியம் சிந்தனையும்
சமூக பார்வையும் கோபமும்
வாழ்வு நோக்கிய முனைப்பும் மட்டுமே
நேசிக்கப்படவேண்டியவை!
காலம் கடந்தப் பாடம் - உதவட்டும்
மற்றவர்களுக்கேனும் !
-சக்தி