Thursday, 3 June 2010

சகஜமானதே!


சகஜமானதே!
காத்திருந்தேன் பல மாதங்கள்
என்னவள் கண்ணசைக்க!
காத்திருந்தேன் பல வாரங்கள்
மென்னவள் புன்னகைக்க!
ஆனது காதல் பரிமாற்றம்
சொல்லதில் அல்ல - உணர்வதில்!
மலையென கனத்து உயர்ந்து நின்று
சரிவில் வாட்டியது வாழ்வை!
உருக்கியது உயிரை! இன்றோ
மூன்றே நாள் முதிர்ந்த காதல்
ஊடலின் வெதுவெதுப்பில்
பொசுங்க உதயமாகிறது
புதுக்காதல் காதலியின் தோழியுடன்!
சகஜமானதே! காதல் தோல்வியும்!
-சக்தி

No comments: