Friday 12 November 2010

தமிழில் பேசுவது அந்நியமா?



இன்றைய உலகப் பொருளாதாரத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, மேலைநாட்டு (பண்பாடு, மொழி) மோகத்தில் சிக்கி, நாளைய இளைஞர்சமுதாயத்திற்கு ஒரு மாய அழுத்தத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் இச்சமுதாய சூழல் மாற்றங்களில் உற்று நோக்கியவற்றை பதிக்க விரும்புகிறேன்.
இன்றைய கணிப்பொறி மற்றும் நிறுவன வர்த்தகம் சார்ந்த துறைகளில் மட்டும் அல்லாமல், நடுத்தட்டு சாமானிய இளைஞனும் “ஆங்கிலம்” என்ற மாய அழுத்தத்துக்கு ஆளாகின்றான்.  இதன் விளைவு, ”ஆங்கிலம் பேசுவது பெருமை” என்பது மாறி ”தமிழில் பேசுவது இழிவு” என்ற எண்ணத்திற்கு இத்தலைமுறையினர் பயனிப்பது உதாரணமின்றி உணரக்கூடிய  செய்தியாகும்.
ஆங்கிலத்தில் பேசுவது பெருமைதான் அதற்கு மறுப்பில்லை, ஆனால் தமிழில் பேசுவது, நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்துவது இழிவு என்ற சிந்தனை நம் தமிழ் சமூகத்தில் நிலைகொள்வது மிகவும் வருந்தவேண்டிய சூழல்.  நம் குழந்தைகள் நம்மிடம் (சமுதாயதில்)  இருந்தே சொற்களை தெரிவு செய்கின்றன. ஆதலால் (இன்றைய தலைமுறையினர்)  நம்மிடம்  நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு தார்மீக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கல்வி, பொருளாதாரம், அரசியல், பன்னாட்டு தொடர்புகள் என பல துறைகளிலும் தன் பொறுப்புணர்ந்து செவ்வனே செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாம் நம் மொழியியல் கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது.
தாய்மொழியை மதிப்பெண்களுடனும், பொருளாதாரத்துடனும் ஒப்பிட்டு பார்க்கும் போக்கும் பெருகிக்கொண்டேதான் இருக்கிறது.  அதன் விளைவு சில பெற்றோரே பள்ளியில் கூட இரண்டாம் மொழி பாடமாக தமிழை தெரிவு செய்யாமல் ( பயிற்று மொழி ஆங்கிலம் என்பது நகர வாழ்வியலில் எழுதப்படாத சட்டமாகவே மாறிவிட்டது) இந்தியையும் பிரெஞ்சு மொழியையும் தெரிவு செய்து, தாய்மொழியின் சுவையைகூட உணர இயலாத ஊனமுற்ற தலைமுறையை உருவாக்குகின்றோம்.
நல்ல தமிழில் பேச முயற்சித்து அதை செவ்வனே இந்நாளும் செய்து வருகின்ற நடிகர் கமல் அவர்களின் மொழியியல் சார்ந்த எண்ணத்தை பாராட்டியே ஆகவேண்டும். அனைத்து கூட்டங்களிலும், நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் தமிழை இயன்றவரை கலப்பில்லாமல் பேசுவதை தன் முத்திரையாக கொண்டுள்ள அவருக்கும், இதுபோன்ற கருத்துக்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
கமல் நேர்காணல் - இங்கே சொடுக்குக
தமிழகத்தில் தமிழனுடன் தமிழில் பேசுவது அந்நியமா ? என்ன அநியாயம்....!
புகழ் வெளிச்சத்தில் உள்ள நடிகரின் முயற்சி பலராலும் எளிதில் அறியப்படுகிறது. அது போன்ற முயற்சிகள், நாடு முழுவதும் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் பல நண்பர்களால், மேற்கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன.
பொறுப்புண்ர்ந்து செயற்படும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் பாராட்டுக்கள் !
மாற்று மொழியின் உண்மையான தேவையற்ற இடங்களில் (தனிப்பட்ட வாழ்வியலில்)  தமிழையே பயன்படுதுவோம்.
இச்சூழலில் இருந்துகொண்டே தான் இச்சூழலை மாற்றவேண்டும்.
கைகோர்ப்போம் நண்பர்களே !.

Tuesday 7 September 2010

” கொரிய தமிழ் மொழித்தொடர்பு ”

” கொரிய தமிழ் மொழித்தொடர்பு ” என்ற தலைப்பில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், இரு அறிஞர்கள், ஆதாரங்களுடன் பறைசாற்றி  கூறியுள்ளனர். ஒருவர் ஜெர்மெனி ந. கண்ணன் அவர்கள் ஏனையவர் கொரியக் நாட்டு மொழியியல் அறிஞர் கிம் ஜூங் நாம். அவர்களது நேர்காணலை கீழுள்ள தொடுப்பில் காண்க. (ப. 77-79)
www.tamilheritage.org/old/text/ebook/chemozi_collection.pdf
அப்பா, அம்மா, நாள், நான், வா போன்ற பொதுவான சொற்கள் கொரிய மொழியில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வறிஞர்களின் ஆராய்ச்சி பற்றி அறிந்து, என் கொரிய மொழி பயிற்சி வகுப்புகளில் சிந்தித்த போது மேலும் இரண்டு சொற்கள் கிடைத்தன. அவை மருவிய தமிழ் சொற்களாகவே கருதத்தோன்றுகின்றன.


1. மொக்கு - 먹다
’மொக்கு’ என்ற சொல் (கொரிய மொழியில் ”மொக்தா”)  பழந்தமிழ் இலக்கியங்களில் ‘வாய் நிறைய தின்னுதல்’ (எ.கா. பசியில் வாடிய ஒருவனுக்கு அறுசுவை உணவு கிடைத்தால் எப்படி தின்பானோ?) என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. இன்றைக்கும் கூட “ என்ன மூக்கு முட்ட மொக்குனியா? “ என கேளியாக கேட்கும் வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருக்கிறது.
தமிழ்ப் பெயர்களுக்கு “அன்” விகுதி போல கொரிய வினைச்சொற்களுக்கு “தா” விகுதி.  தமிழ் மொக்கு--> மொக்தா வாக திரிந்திருக்ககூடும்.

மொக்கித்தின்(னு)-தல் mokki-t-tiṉ-

, v. tr. < மொக்கு- +. To eat greedily in large mouthfuls; ஒருசேர விழுங்கி யுண்ணுதல். (W.)
முக்கு²-தல் mukku-

, 5 v. tr. cf. மொக்கு-. To eat in large mouthfuls; நிரம்ப வாயிற் பெய்து உண்ணுதல். பாசவன் முக்கி (புறநா. 63).
மூலம் : (தமிழ் லெக்சிகன்) இணைய தமிழகராதி.
먹다1 1.[음식을] eat, have, take, [상식(常食)으로] live on, feed on.
மூலம்: கொரிய- ஆங்கில இணையஅகராதி.


2. ஒல்லுதல் - 어울리다
”ஒல்லுதல்” என்ற தமிழ்ச்சொல் 어울리다 (ஒவுல்லிதா) என்று கொரிய மொழியில் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  கீழுள்ள குறிப்புகள் சிந்தனைக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.
ஒல்லு-தல் ollu-

, prob. 5 v. [M. ollu.] intr. 1. To be able, possible, practicable; இயலுதல். ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே (குறள், 673). 2. To agree; உடன்படுதல். பாசறை யல்லது நீயொல் லாயே (புறநா. 31, 6). 3. To be fit, suitable; தகுதல். கங்குற்போதி லீங்கு வந்திடுக தொல்லாது (கந்தபு. வள் ளியம். 162). 4. To combine, unite, join; பொருந்து தல். கானத் தொல்லும் பேரழல் (கந்தபு. ஆற்று. 7). 5. To occur, happen, take place; சம்பவித்தல். (W.)--tr. 1. To brook, tolerate; பொறுத்தல். ஒல் லுவ சொல்லாது (பரிபா. 12, 65). 2. To mend, as a net; to braitl, as a basket; ஒலைப்பெட்டி முதலி யன பொத்துதல். (W.)
மூலம் : (தமிழ் லெக்சிகன்) இணைய தமிழகராதி.
어울리다 1.
[어우르게 되다] associate (with), join (with), mix[mingle] (with), bear[keep] (a person) company, give (a person) one´s company, go[run] with.

2.[조화되다] become, match, suit, befit, go (well) (with), be becoming (to), harmonize (with), be suitable (to, for), be in keeping(with).
மூலம்: கொரிய- ஆங்கில இணையஅகராதி.


இவைகளும் கொரிய தமிழ் மொழித்தொடர்புக்கு சான்றாக அமைகின்றன.

பதினாரும் பெற்று....!

பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
என்று பெரியோர் வாழ்த்தக் கேட்டிருக்கின்றோம்.

அந்த பதினாறு என்னவென்று ஒரு தொலைக்கட்சி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் கூறக்கேட்டு பதிக்கப்படுகிறது.

1.  கல்வி
2.  அறிவு
3.  ஆயுள்
4.  ஆற்றல்
5.  இளமை
6.  துணிவு
7.  பெருமை
8.  பொன்
9.  பொருள்
10. புகழ்
11. நிலம்
12. நன்மக்கள்
13. நல்லொழுக்கம்
14. நோயின்மை
15.  முயற்சி
16.  வெற்றி


பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ்வோமாக!

Friday 16 July 2010

விளையாட்டாய் மருத்துவம்!


சித்த மருத்துவம் மற்றும் சித்தர்கள் பற்றிய தெளிவான புரிதல் சாமான்யர்களின் மத்தியில் இன்றும் இல்லாத நிலைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு (திருவள்ளுவருக்கு) முன்னரே சித்தர்கள் இருந்துள்ளனர் என சில இலக்கிய குறிப்புகள் கூறுகின்றன.
இது தொடர்பாக என் நண்பனின் தாயார் கூரிய செவிவழிச்செய்தி ஒன்று என்னை மிகவும் கவர, அதை இந்த வலைப்பூவில் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
“ சித்தர்கள் பெரும்பாலும் பயணித்துக்கொண்டே இருப்பவர்கள். அவ்வாறு பயணம் செய்யும் போது குழந்தைகளிடம் மருத்துவக் குறிப்பு நிறைந்த பாடல்களை விளையாட்டு போல சொல்லிக்கொடுத்து சென்றுவிடுவர் என்பதுதான் “
இப்போது தனது ஐம்பதுகளில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் சிலர் சிறுவயதில் இந்த பாடலை பாடி விளையாடி இருக்கக்கூடும்.

“ காக்கா கருப்பக்கா
  கஞ்சிக்கு கடி நெல்லிக்கா
  பூப்பூ புளியம்பூ
 பொன்னாங்கன்னிக்கு தாழம்பூ “

காய்க்காத கருப்பைக்கு நெல்லிக்காயும், பூப்படைதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு புளியம்பூ மருந்தாகும் என்றும், பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்கள் தாழம்பூ போன்ற மேனியை பெறுவர் என்ற மருத்துவக் குறிப்பும் அடங்கியுள்ளது.

”தத்தக்கா புத்தக்கா தயிரும் சோறும்
முட்டவந்தா எறுமை சோறு
பனிமலையில ஏரி கொடி நட்டுவந்த
வீரய்யா! உங்க அப்பா பேரு என்ன ?

முருங்கப்பூ....!

முருங்கப்பூவ தின்னவரே
முந்திரி சாற்றை குடிச்சவரே
பாவை கைய படக்குன்னு எடு!

எடுக்காவிட்டால்,

கோழிக்குடம்பை எடுத்து
குப்பைமேனிய எடுத்து
கூசாம கை எடுத்துக்கோ! “

தத்தக்கா புத்தக்கா சின்ன குழந்தைகளுக்கு தயிர் சோறு, அடங்காமல் அதிக முரட்டுத்தனமான குழந்தைகளுக்கு எருமை பாலும் எருமை தயிர் சோறு. அது குழந்தையை கொஞ்சம் மந்தமாக்கி நல்வழிப்படுத்த உதவும். பனிமலையிலே ஏறிகொடி நாட்டும் தைரியமும் ஆண்மையும் முருங்கப்பூவின் மகிமை, அதுபோல முந்திரிச்சாறு, கோழியின் கல்லீரல் மற்றும் குப்பை மேனிக்கீரை போன்றவை ஆண்களின் கலவி வாழ்க்கையில் சிறந்துவிளங்க உதவும். மற்றும் அவைகளை மிகவும் சோர்ந்து, சோம்பிக்கிடக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து சுறுசுறுப்படைய செய்ய இயலும் என்பதாக இந்த பாடல் அமைந்துள்ளது.

இந்த பாடல்களும் அதன் விளக்கமும் சித்தர்கள் பற்றியறிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.
சித்தர்கள் பற்றி கீழ்கண்ட வலைப்பூவில் தோழி தொடர்ந்து பல செய்திகளை மிக எளிய நடையில் பதிப்பித்துவருகிறார்.



Wednesday 7 July 2010

சிந்தனை செய் மனமே!

இந்த செயலை அந்த உண்மையான இறைவன் பரிசுத்த ஏசுவே விரும்பமாட்டார்! இது போன்ற செயலில் ஈடுபடும் என் கிருத்துவ உடன்பிறப்புகளே, குறைந்தபட்சம் உங்கள் மத சேவை அதை ஏற்றுக்கொள்ளும் இறைவனுக்கேனும் பிடித்தவகையில் இருக்கவேண்டும் அல்லவா ? இன்றைய காலகட்டத்தில் இது ஒரு தொழிலாகவே (profession) உருவெடுத்துள்ளது. இங்கு கொரியாவில் அது ஒரு தர்மசங்கடமாகவே உள்ளது கொரியவாழ் வெளிநாட்டவர்க்கு. வாரத்தின் இறுதிநாள் நிம்மதியான உறக்கத்தில் உள்ள நண்பகல் நேரத்தில் ஒலிக்கும் அழைப்பு ம்ணி. உண்மையிலேயே அவர்கள் மிகவும் கணிவானவர்கள், அதனால் தானோ என்னவோ நாம் குறிப்பாய் உணர்த்தும் செய்தியை அவர்கள் உணரவே மாட்டார்கள்.

Saturday 5 June 2010

கடற்பறவைகளின் இயல்பான சாகசங்கள்

கடற்பறவைகளின் இயல்பான சாகசங்கள்











வசந்த காலத்தில் பூத்துக்குலுங்கும் (Cherry Blossom) மரங்களின் ரம்மியமான அழகை கண்டுகளிக்க “ஜின்ஹே” என்ற நகரம் நோக்கிய சிறிய கப்பல் பயணத்தில் பதிக்கப்பட்ட விடியோ காட்சி. ஒரறிவே கொண்ட பறவைகளின் மிக அற்புதமான கலை நிகழ்ச்சியாக இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகள் பல விலங்கு மற்றும் பறவைகளின் சரணாலயங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் இதுவோ பயிற்சிக்குட்படாத இயற்கை பறவைகளின், இயல்பான சாகசங்கள். இதில் படித்துணர்ந்து கொள்வத்ற்குக்கூட கடினமான பல இயற்பியல் விதிகளின் பயன்பாட்டை காணலாம். குறைந்தது 12 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும் கப்பலில் இருந்து வீசப்படும் “சிப்ஸ்” துகள்கள் காற்றில் பறந்து வர அவற்றை சரியாக தன் சிறிய அலகுகளால் கவ்வும் காட்சி அற்ப்புதமாக இருந்தது.


கொரிய வரலாற்றின் வீரமங்கை


கொரிய வரலாற்றின் வீரமங்கை
”ஜின்ஜு”என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தில் உள்ள "நம்” ஆற்றுப்படுகையில் அமைந்த கோட்டையில் இவ்வீரமங்கையின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.1593-ல் நடைபெற்ற போரில் ஜப்பானியர்கள் கொரியாவின் இந்த பகுதியை கைப்பற்றியுள்ளனர். ” நொங்கே ” என்ற கொரிய நடன மங்கை ஜப்பானியர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடனமாட பணிக்கப்பட்டிருக்கிறாள். அந்த நடன நிகழ்ச்சியில் வெற்றிக்களிப்பில் இருந்த ஜப்பானிய தளபதியை (கெயாமுரா ரோகுசுகே) கட்டிப்பிடித்துக் கொண்டு ஆற்றங்கரையில் இருந்த பாறையின் மீது தாவிகுதித்து அவனை கொன்று தானும் உயிர்நீத்த பெருமைக்குரிய வீரமங்கை இன்றும் நினைவுக்கூரப்படுகிறாள்.
தற்கொலைத்தாக்குதல் நீண்ட வரலாறு கொண்டிருக்கும் போல!

கொரில்லா குழந்தை மனித தாயின் பராமரிப்பில்


மனமார்ந்த பாராட்டுக்கள் அந்த கொரியப் பெண்ணிற்கு.
மிகவும் கொடுத்துவைத்த குரங்குகள். மாற்றினத்தாயின் இதமான பராமரிப்பில் தன் இனத்தின் இயல்புகளை மற்றவர் அறிய ஆராய்ச்சி கூடத்தில் வாழ்கிறது.
இடம்: சியோல் கிராண்ட் பார்க்.

Thursday 3 June 2010

முன் பனியா! முதல் மழையா!


முன் பனியா! முதல் மழையா!

முன் பனியா! முதல் மழையா!

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே!

புரியாத உறவில் நின்றேன்

அறியாத சுகங்கள் கண்டேன்

மாற்றம் தந்தவள் நீதானே!

என் பாதைகள் என் பாதைகள்

உனது விழி பார்த்து வந்து முடியுதடி

என் இரவுகள் என் இரவுகள்

உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி

இரவையும் பகலையும் மாற்றி விட்டாய்

எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே !

மார்கழி பூவே!


மார்கழி பூவே!

மார்கழி பூவே மார்கழி பூவே!
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தாள் கனவுகள் கொள்ளை!
பூக்களை பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடை பாதை கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் இன்று ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்று ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்।
மார்கழி பூவே மார்கழி பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை!


எங்கே எனது கவிதை!

எங்கே எனது கவிதை!

எங்கே எனது கவிதை கனவிலே
எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா
விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என்
கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை கனவிலே
எழுதி மடித்த கவிதை
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்த மனம் தேடுதே
மையல் பாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

எங்கே எனது கவிதை கனவிலே
எழுதி மடித்த கவிதை

உறவுகள் தொடர் கதை!

உறவுகள் தொடர் கதை!

உறவுகள் தொடர் கதை உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாணம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புது புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

நட்பு !


நட்பு !

உடனிருந்த காலத்தில்
கருத்துப் போர்!
இல்லாத நாள் அது
திருநாள்.
நட்பின் இயக்கம் அது
வேறுபாட்டில் - ஒரு
ஞானியின் கருத்து!
கருத்து வேறுபாட்டிலேயே
இயங்கிய நட்பு - பிரிவில்
உணர்த்தியது அவளென் சகஊழியை
மட்டுமல்ல! சற்று மேலே என்று!
-சக்தி

சகஜமானதே!


சகஜமானதே!
காத்திருந்தேன் பல மாதங்கள்
என்னவள் கண்ணசைக்க!
காத்திருந்தேன் பல வாரங்கள்
மென்னவள் புன்னகைக்க!
ஆனது காதல் பரிமாற்றம்
சொல்லதில் அல்ல - உணர்வதில்!
மலையென கனத்து உயர்ந்து நின்று
சரிவில் வாட்டியது வாழ்வை!
உருக்கியது உயிரை! இன்றோ
மூன்றே நாள் முதிர்ந்த காதல்
ஊடலின் வெதுவெதுப்பில்
பொசுங்க உதயமாகிறது
புதுக்காதல் காதலியின் தோழியுடன்!
சகஜமானதே! காதல் தோல்வியும்!
-சக்தி

அதிர்வு!


அதிர்வு!

அவன் இதயத்துள் துடிக்கும்

அவள் இதய அதிர்வை அவளும்

அவள் இதயத்துள் துடிக்கும்

அவன் இதய அதிர்வை அவனும்

உணர உணரப்பட்டது உண்மைக் காதல்!

இவ்வற்புத உணர்வு பரிமாற்றத்தில்

குரல்வளையதிர்வின் தேவையேன்?

-சக்தி

பார்த்துக்கொள்!


பார்த்துக்கொள்!

சற்றேமுன் பிடுங்கி
எறிந்த ஆலவிருட்ச சுவடானது - என் உள்ளம்
உண்மைதான் பிடுங்கி எறியப்பட்டது
ஆலவிருட்சம் அல்ல - என் காதல் விருட்சம்
உயிர் பிரியும் வலியையும்
தாங்கி இருந்தேன் - என்னுடன் பிறந்த
நண்பர்களும் அறியா வண்ணம்!
விதை(ளை)தத்தவன் நீ - கால மருத்துவனே
அழகு தமிழால் மருந்து போடு!
இனிய கவியால் மருந்து போடு!
என் உள ரணம்
ஆரும்வரை பார்த்துக்கொள்!
இன்னொரு உள்ளம்
ரணமாகாமல் பார்த்துக்கொள்!
-சக்தி

உயர்வில் சரிவு!


உயர்வில் சரிவு!

மழலையாய் கழித்த காலங்கள் - அது

நினைவில் இல்லை - நிழலாடும் கற்பனையில்

சலிக்காமல் நினைக்கும் அ(ம்மா)ப்பாவின்

கொஞ்சலுக்கிடையில்!

சிறுவனாய் கடந்த பருவம் - சிறிய

குருவிக் குடும்பம் - மனதில்

போட்டு வைத்த பதியம்!

கூட்டுக்கு அது ஒரு வாயில்

ஈட்டிய லட்சுமி போவதற்கோ

பலவாயில்!

எங்கஊரு ரேசன் கடையிலே

உளுத்த அரிசி வாசனைச் சோறு

அள்ளித்தின்ன அறியா வயசு

மகிழ்ச்சி பெருக்காய் நெஞ்சுக்குள்ளே!

மலைமேல் மண்சரிய

உருண்டோடிய பாறையாய்

உருண்ட காலச்சக்கரத்தில் - கிடைத்தது

பட்டறிவும் படிப்பறிவும் விழித்துழைக்க

முத்தென தொழிழாக்கி

உரியது சில ஆக்கி - நின்ற போதினிலே

சரிந்து கிடந்தது குருவிக்கூட்டு மகிழ்ச்சி!

பிரபஞ்ச விரிவாக்க விதிபோல

மனித மனமும் விரிந்து கொண்டும்

ஒன்றைவிட்டு ஒன்று விலகிக்கொண்டும்

போகும் போலும்!

-சக்தி

ஏற்கமறுக்கிறதே ஏன் ?




ஏற்கமறுக்கிறதே ஏன் ?

நீ விரும்பிய ஒன்று - கிடைக்காமல்

போவதுஅதைவிட சிறந்த ஒன்று கிடைப்பதற்கே!

என் வாழ்நாளில் நானே உணர்ந்தபின்னும்

கண்ணே! உன் விஷயத்தில் மட்டும் - மனம்

ஏற்கமறுக்கிறதே ஏன் ?


-சக்தி

காலம் கடந்த பாடம்!


காலம் கடந்த பாடம்!

அவன் பார்வையில் மாயை(காதல்) படர
ஆனது அவள் எச்சில் குமிழியும்
ரசனைக்குரியதாக !

தந்தையை ஏய்த்து விட்டு வந்தாள்
தன்னை பார்க்க - மகிழ்ந்தான்!
தன் சிநேகிதத்தை பொய்யால்
சமாளிக்க - ரசித்தான்!
நேர்க்கொண்ட நோக்கில்லா(ததை)
நளினமென - உவந்தான்!
மிகப் பிடித்த பிடிவாதம்
அவளுக்குரியமிடுக்காய் - உணர்ந்தான்!
செய்த பணவிரயம் தன்னுடனான
காலவிரயத்துக்கே - என்றெண்ணினான்!
உற்றார் உறவினரை எதிர்த்து
மணமுடித்து - மகிழ்ந்தான்!
மனைவியான காதலியின்
சுயவியல்புகளால் - சிந்தித்தான்!
தவறான விஷயங்கள் மட்டுமே
தெரிந்திருக்கிறது - மிக அழகாக!

யதார்த்தம் தைரியம் சிந்தனையும்
சமூக பார்வையும் கோபமும்
வாழ்வு நோக்கிய முனைப்பும் மட்டுமே
நேசிக்கப்படவேண்டியவை!
காலம் கடந்தப் பாடம் - உதவட்டும்
மற்றவர்களுக்கேனும் !
-சக்தி

Monday 19 April 2010

காதல் செய்!







காதல் செய்!

காதல் செய் காதல் செய் !
கண்ணில் பட்டதை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
உன்னில் உள்ளதை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
மஞ்சள் வெய்யிலை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
வெள்ளை மழையை காதல் செய் !

திண்ணை வைத்த வீட்டை சிட்டு குருவி கூட்டை
தாடி வைத்த ஆட்டை காதல் செய் !

வண்ண பூக்கள் தோட்டம் வெள்ளி பனிமூட்டம்
விண்ணில் மேக கூட்டம் காதல் செய் !

வாழும் வாழ்வை காதல் செய் !

போகும் ஊரை நீ காதல் செய் !
காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
கண்ணில் பட்டதை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
உன்னில் உள்ளதை காதல் செய் !

நான் என்ற அகந்தை துளியும் இன்றி
உயர்ந்த மலைகள் கால் மிதித்த இடத்தில்
பாத சுவட்டை அழிக்கும் அலைகள்
மாட்டு கொம்பில் கட்சி பாசம்
டாட்டா காட்டும் குழந்தை நேசம்
காற்றில் வரும் மீன்கள் வாசம்
இதையும் காதலிப்போம்.

காதல் செய் காதல் செய் !






Tuesday 6 April 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பே
காற்று பலமாய் இருக்க
பயந்து விடாதே!
அது தென்றல்தான் - உன்
பிறந்தநாள் வாழ்த்துகூற
வருகிறது சற்றே வேகமாக! என்னைப்போல!


----------------------------------------------------------------------
போட்டியிட்டேன் - நான்
போட்டியிட்டேன்
மரகதப் பூக்கள்
குளிரிளந்தென்றல்
கார்நீல மேகத்துடனும்
போட்டியிட்டேன் !
உன் பிறந்தநாள் வாழ்த்துக் கூற!


----------------------------------------------------------------------
பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை .
தேவையில்லை இந்த கவிதைக்கு!
கவிதைகள் பல நூற்றாண்டு
வாழ்வது - மரபுதானே!



----------------------------------------------------------------------
நண்பா
உன் அருகில் நானிருந்தால்
ஆதவன் கரமுனை தொடுமுன்
என் வாழ்த்துத் தென்றல் தழுவியிருக்கும்!
நானோ இங்கிருப்பதால் - அந்த
ஆதவனிடமே தந்துள்ளேன் - உன்
பிறந்தநாள் வாழ்த்துக்களை!
இன்றுனை முதலில் தழுவிய
கதிரவனின் கதிர்கள் - என் கைகளே!
தமிழ் போல் வாழ்க!
கவிபோல் வாழ்க!


----------------------------------------------------------------------
உன் பிறந்தநாள் கொண்டாட்டம்
கோறுகிறேன் மறுபரிசீலனை!
தோட்டத்து மலர்கள் ஒன்றேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
குளுமையின் உவமை நிலவேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
கவிதைகள்தான் என்றேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
பின் உனக்கு மட்டும் ஏன்?
நீ முழுநிலவில் மலர்ந்த கவிதை என்பதாலோ?
பல்லாண்டு வாழ்க!
பண்பாடு வளர்க்க!


-சக்தி

Friday 2 April 2010

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !


மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

எது ஞாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை !

யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை !

அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய் !
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய் !

கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !


Wednesday 17 March 2010

சத்தமில்லாமல் ஓர் மனத்தகர்ப்பு!


சத்தமில்லாமல் ஓர் மனத்தகர்ப்பு!

இவள்தான் உன் பொண்டாட்டி
சொன்னது என் பாட்டி - வெட்கி
ஓடிய அத்தை மகளைக் காட்டி

ஏழே வயதான நானன்று
தந்தை முகம் பார்க்க - களிப்பில்
தலையசைப்பு சத்தமில்லாமல் !

அவள்தன் காதலன் கைசேர்க்க இன்றோ
சின்ன சலசலப்பு - ஓய்ந்தபின்
அனைவருக்கும் களிப்பு - என்னில் மட்டும்
சத்தமில்லாமல் ஓர் மன
த்தகர்ப்பு !


-சக்தி


Monday 15 March 2010

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு.

௧. எழுத்திலக்கணம்
௨. எழுத்தாற்றல்
௩. கணிதவியல்
௪. மறைநூல்
௫. தொண்மம்
௬. இலக்கணவியல்
௭. நயனூல்
௮. கணியக்கலை
௯. அறத்துப்பால்
௧௦. உவகக்கலை
௧௧. மந்திரக்கலை
௧௨.நிமித்தகக்கலை
௧௩. கம்மியக்கலை

௧௪. மருத்துவக்கலை
௧௫. உறுப்பமைவு
௧௬. மறவனப்பு
௧௭. வனப்பு
௧௮. அணியியல்
௧௯. இனிது மொழிதல்
௨௦. நாடகக்கலை
௨௧. ஆடற்கலை
௨௨. ஒலிநுட்ப அறிவு
௨௩. யாழியியல்
௨௪. குழலிசை
௨௫. மத்தளநூல்

௨௬. தாளயியல்
௨௭. வில்லாற்றல்
௨௮. பொன்னோட்டம்
௨௯. தேர்ப்பயிற்சி
௩௦. யானையேற்றம்
௩௧. குதிரையேற்றம்
௩௨. மணிநோட்டம்
௩௩. மண்ணியல்
௩௪. போர்ப்பயிற்சி
௩௫. கைக்கலப்பு
௩௬. கவர்ச்சியியல்
௩௭. ஓட்டுகை
௩௮. நட்புபிரிக்கை
௩௯. மயக்குக்கலை
௪௦. புணருங்கலை
௪௧. வசியக்கலை
௪௨. இதழியக்கலை
௪௩. இன்னிசைப்பயிற்சி
௪௪. பிற உயிர் மொழி
௪௫. மகிழுறுத்தம்
௪௬. நாடிப்பயிற்சி
௪௭. கல்லுளம்
௪௮. இளஞ்சிப்பரிகை
௪௯. மறந்ததையறிதல்

௫௦. வான்புகுதல்
௫௧. வான்செல்கை
௫௨. கூடுவிட்டு கூடு பாயுதல்
௫௩. தன்னுருகரத்தல்
௫௪. மாயம்
௫௫. பெருமாயம்
௫௬. நீர்க்கட்டு
௫௭. அலர்க்கட்டு
௫௮. வளிக்கட்டு
௫௯. கண்கட்டு
௬௦. நாவுக்கட்டு
௬௧. விந்துக்கட்டு
௬௨. புதையற்கட்டு
௬௩. வார்க்கட்டு
௬௪. சூனியம்

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள் நிகழ்ச்சியில் இந்த பட்டியலை கூரிய இளம் பேச்சாளனுக்கு நன்றி.
கேட்டதை எழுத்தாக்கி இங்கு பதித்தது மட்டுமே நான்.