Saturday 5 June 2010

கடற்பறவைகளின் இயல்பான சாகசங்கள்

கடற்பறவைகளின் இயல்பான சாகசங்கள்











வசந்த காலத்தில் பூத்துக்குலுங்கும் (Cherry Blossom) மரங்களின் ரம்மியமான அழகை கண்டுகளிக்க “ஜின்ஹே” என்ற நகரம் நோக்கிய சிறிய கப்பல் பயணத்தில் பதிக்கப்பட்ட விடியோ காட்சி. ஒரறிவே கொண்ட பறவைகளின் மிக அற்புதமான கலை நிகழ்ச்சியாக இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகள் பல விலங்கு மற்றும் பறவைகளின் சரணாலயங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் இதுவோ பயிற்சிக்குட்படாத இயற்கை பறவைகளின், இயல்பான சாகசங்கள். இதில் படித்துணர்ந்து கொள்வத்ற்குக்கூட கடினமான பல இயற்பியல் விதிகளின் பயன்பாட்டை காணலாம். குறைந்தது 12 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும் கப்பலில் இருந்து வீசப்படும் “சிப்ஸ்” துகள்கள் காற்றில் பறந்து வர அவற்றை சரியாக தன் சிறிய அலகுகளால் கவ்வும் காட்சி அற்ப்புதமாக இருந்தது.


கொரிய வரலாற்றின் வீரமங்கை


கொரிய வரலாற்றின் வீரமங்கை
”ஜின்ஜு”என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தில் உள்ள "நம்” ஆற்றுப்படுகையில் அமைந்த கோட்டையில் இவ்வீரமங்கையின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.1593-ல் நடைபெற்ற போரில் ஜப்பானியர்கள் கொரியாவின் இந்த பகுதியை கைப்பற்றியுள்ளனர். ” நொங்கே ” என்ற கொரிய நடன மங்கை ஜப்பானியர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடனமாட பணிக்கப்பட்டிருக்கிறாள். அந்த நடன நிகழ்ச்சியில் வெற்றிக்களிப்பில் இருந்த ஜப்பானிய தளபதியை (கெயாமுரா ரோகுசுகே) கட்டிப்பிடித்துக் கொண்டு ஆற்றங்கரையில் இருந்த பாறையின் மீது தாவிகுதித்து அவனை கொன்று தானும் உயிர்நீத்த பெருமைக்குரிய வீரமங்கை இன்றும் நினைவுக்கூரப்படுகிறாள்.
தற்கொலைத்தாக்குதல் நீண்ட வரலாறு கொண்டிருக்கும் போல!

கொரில்லா குழந்தை மனித தாயின் பராமரிப்பில்


மனமார்ந்த பாராட்டுக்கள் அந்த கொரியப் பெண்ணிற்கு.
மிகவும் கொடுத்துவைத்த குரங்குகள். மாற்றினத்தாயின் இதமான பராமரிப்பில் தன் இனத்தின் இயல்புகளை மற்றவர் அறிய ஆராய்ச்சி கூடத்தில் வாழ்கிறது.
இடம்: சியோல் கிராண்ட் பார்க்.

Thursday 3 June 2010

முன் பனியா! முதல் மழையா!


முன் பனியா! முதல் மழையா!

முன் பனியா! முதல் மழையா!

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே!

புரியாத உறவில் நின்றேன்

அறியாத சுகங்கள் கண்டேன்

மாற்றம் தந்தவள் நீதானே!

என் பாதைகள் என் பாதைகள்

உனது விழி பார்த்து வந்து முடியுதடி

என் இரவுகள் என் இரவுகள்

உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி

இரவையும் பகலையும் மாற்றி விட்டாய்

எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே !

மார்கழி பூவே!


மார்கழி பூவே!

மார்கழி பூவே மார்கழி பூவே!
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தாள் கனவுகள் கொள்ளை!
பூக்களை பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடை பாதை கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் இன்று ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்று ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்।
மார்கழி பூவே மார்கழி பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை!


எங்கே எனது கவிதை!

எங்கே எனது கவிதை!

எங்கே எனது கவிதை கனவிலே
எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா
விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என்
கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை கனவிலே
எழுதி மடித்த கவிதை
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்த மனம் தேடுதே
மையல் பாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

எங்கே எனது கவிதை கனவிலே
எழுதி மடித்த கவிதை

உறவுகள் தொடர் கதை!

உறவுகள் தொடர் கதை!

உறவுகள் தொடர் கதை உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாணம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புது புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

நட்பு !


நட்பு !

உடனிருந்த காலத்தில்
கருத்துப் போர்!
இல்லாத நாள் அது
திருநாள்.
நட்பின் இயக்கம் அது
வேறுபாட்டில் - ஒரு
ஞானியின் கருத்து!
கருத்து வேறுபாட்டிலேயே
இயங்கிய நட்பு - பிரிவில்
உணர்த்தியது அவளென் சகஊழியை
மட்டுமல்ல! சற்று மேலே என்று!
-சக்தி

சகஜமானதே!


சகஜமானதே!
காத்திருந்தேன் பல மாதங்கள்
என்னவள் கண்ணசைக்க!
காத்திருந்தேன் பல வாரங்கள்
மென்னவள் புன்னகைக்க!
ஆனது காதல் பரிமாற்றம்
சொல்லதில் அல்ல - உணர்வதில்!
மலையென கனத்து உயர்ந்து நின்று
சரிவில் வாட்டியது வாழ்வை!
உருக்கியது உயிரை! இன்றோ
மூன்றே நாள் முதிர்ந்த காதல்
ஊடலின் வெதுவெதுப்பில்
பொசுங்க உதயமாகிறது
புதுக்காதல் காதலியின் தோழியுடன்!
சகஜமானதே! காதல் தோல்வியும்!
-சக்தி

அதிர்வு!


அதிர்வு!

அவன் இதயத்துள் துடிக்கும்

அவள் இதய அதிர்வை அவளும்

அவள் இதயத்துள் துடிக்கும்

அவன் இதய அதிர்வை அவனும்

உணர உணரப்பட்டது உண்மைக் காதல்!

இவ்வற்புத உணர்வு பரிமாற்றத்தில்

குரல்வளையதிர்வின் தேவையேன்?

-சக்தி

பார்த்துக்கொள்!


பார்த்துக்கொள்!

சற்றேமுன் பிடுங்கி
எறிந்த ஆலவிருட்ச சுவடானது - என் உள்ளம்
உண்மைதான் பிடுங்கி எறியப்பட்டது
ஆலவிருட்சம் அல்ல - என் காதல் விருட்சம்
உயிர் பிரியும் வலியையும்
தாங்கி இருந்தேன் - என்னுடன் பிறந்த
நண்பர்களும் அறியா வண்ணம்!
விதை(ளை)தத்தவன் நீ - கால மருத்துவனே
அழகு தமிழால் மருந்து போடு!
இனிய கவியால் மருந்து போடு!
என் உள ரணம்
ஆரும்வரை பார்த்துக்கொள்!
இன்னொரு உள்ளம்
ரணமாகாமல் பார்த்துக்கொள்!
-சக்தி

உயர்வில் சரிவு!


உயர்வில் சரிவு!

மழலையாய் கழித்த காலங்கள் - அது

நினைவில் இல்லை - நிழலாடும் கற்பனையில்

சலிக்காமல் நினைக்கும் அ(ம்மா)ப்பாவின்

கொஞ்சலுக்கிடையில்!

சிறுவனாய் கடந்த பருவம் - சிறிய

குருவிக் குடும்பம் - மனதில்

போட்டு வைத்த பதியம்!

கூட்டுக்கு அது ஒரு வாயில்

ஈட்டிய லட்சுமி போவதற்கோ

பலவாயில்!

எங்கஊரு ரேசன் கடையிலே

உளுத்த அரிசி வாசனைச் சோறு

அள்ளித்தின்ன அறியா வயசு

மகிழ்ச்சி பெருக்காய் நெஞ்சுக்குள்ளே!

மலைமேல் மண்சரிய

உருண்டோடிய பாறையாய்

உருண்ட காலச்சக்கரத்தில் - கிடைத்தது

பட்டறிவும் படிப்பறிவும் விழித்துழைக்க

முத்தென தொழிழாக்கி

உரியது சில ஆக்கி - நின்ற போதினிலே

சரிந்து கிடந்தது குருவிக்கூட்டு மகிழ்ச்சி!

பிரபஞ்ச விரிவாக்க விதிபோல

மனித மனமும் விரிந்து கொண்டும்

ஒன்றைவிட்டு ஒன்று விலகிக்கொண்டும்

போகும் போலும்!

-சக்தி

ஏற்கமறுக்கிறதே ஏன் ?




ஏற்கமறுக்கிறதே ஏன் ?

நீ விரும்பிய ஒன்று - கிடைக்காமல்

போவதுஅதைவிட சிறந்த ஒன்று கிடைப்பதற்கே!

என் வாழ்நாளில் நானே உணர்ந்தபின்னும்

கண்ணே! உன் விஷயத்தில் மட்டும் - மனம்

ஏற்கமறுக்கிறதே ஏன் ?


-சக்தி

காலம் கடந்த பாடம்!


காலம் கடந்த பாடம்!

அவன் பார்வையில் மாயை(காதல்) படர
ஆனது அவள் எச்சில் குமிழியும்
ரசனைக்குரியதாக !

தந்தையை ஏய்த்து விட்டு வந்தாள்
தன்னை பார்க்க - மகிழ்ந்தான்!
தன் சிநேகிதத்தை பொய்யால்
சமாளிக்க - ரசித்தான்!
நேர்க்கொண்ட நோக்கில்லா(ததை)
நளினமென - உவந்தான்!
மிகப் பிடித்த பிடிவாதம்
அவளுக்குரியமிடுக்காய் - உணர்ந்தான்!
செய்த பணவிரயம் தன்னுடனான
காலவிரயத்துக்கே - என்றெண்ணினான்!
உற்றார் உறவினரை எதிர்த்து
மணமுடித்து - மகிழ்ந்தான்!
மனைவியான காதலியின்
சுயவியல்புகளால் - சிந்தித்தான்!
தவறான விஷயங்கள் மட்டுமே
தெரிந்திருக்கிறது - மிக அழகாக!

யதார்த்தம் தைரியம் சிந்தனையும்
சமூக பார்வையும் கோபமும்
வாழ்வு நோக்கிய முனைப்பும் மட்டுமே
நேசிக்கப்படவேண்டியவை!
காலம் கடந்தப் பாடம் - உதவட்டும்
மற்றவர்களுக்கேனும் !
-சக்தி