Friday 16 July 2010

விளையாட்டாய் மருத்துவம்!


சித்த மருத்துவம் மற்றும் சித்தர்கள் பற்றிய தெளிவான புரிதல் சாமான்யர்களின் மத்தியில் இன்றும் இல்லாத நிலைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு (திருவள்ளுவருக்கு) முன்னரே சித்தர்கள் இருந்துள்ளனர் என சில இலக்கிய குறிப்புகள் கூறுகின்றன.
இது தொடர்பாக என் நண்பனின் தாயார் கூரிய செவிவழிச்செய்தி ஒன்று என்னை மிகவும் கவர, அதை இந்த வலைப்பூவில் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
“ சித்தர்கள் பெரும்பாலும் பயணித்துக்கொண்டே இருப்பவர்கள். அவ்வாறு பயணம் செய்யும் போது குழந்தைகளிடம் மருத்துவக் குறிப்பு நிறைந்த பாடல்களை விளையாட்டு போல சொல்லிக்கொடுத்து சென்றுவிடுவர் என்பதுதான் “
இப்போது தனது ஐம்பதுகளில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் சிலர் சிறுவயதில் இந்த பாடலை பாடி விளையாடி இருக்கக்கூடும்.

“ காக்கா கருப்பக்கா
  கஞ்சிக்கு கடி நெல்லிக்கா
  பூப்பூ புளியம்பூ
 பொன்னாங்கன்னிக்கு தாழம்பூ “

காய்க்காத கருப்பைக்கு நெல்லிக்காயும், பூப்படைதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு புளியம்பூ மருந்தாகும் என்றும், பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்கள் தாழம்பூ போன்ற மேனியை பெறுவர் என்ற மருத்துவக் குறிப்பும் அடங்கியுள்ளது.

”தத்தக்கா புத்தக்கா தயிரும் சோறும்
முட்டவந்தா எறுமை சோறு
பனிமலையில ஏரி கொடி நட்டுவந்த
வீரய்யா! உங்க அப்பா பேரு என்ன ?

முருங்கப்பூ....!

முருங்கப்பூவ தின்னவரே
முந்திரி சாற்றை குடிச்சவரே
பாவை கைய படக்குன்னு எடு!

எடுக்காவிட்டால்,

கோழிக்குடம்பை எடுத்து
குப்பைமேனிய எடுத்து
கூசாம கை எடுத்துக்கோ! “

தத்தக்கா புத்தக்கா சின்ன குழந்தைகளுக்கு தயிர் சோறு, அடங்காமல் அதிக முரட்டுத்தனமான குழந்தைகளுக்கு எருமை பாலும் எருமை தயிர் சோறு. அது குழந்தையை கொஞ்சம் மந்தமாக்கி நல்வழிப்படுத்த உதவும். பனிமலையிலே ஏறிகொடி நாட்டும் தைரியமும் ஆண்மையும் முருங்கப்பூவின் மகிமை, அதுபோல முந்திரிச்சாறு, கோழியின் கல்லீரல் மற்றும் குப்பை மேனிக்கீரை போன்றவை ஆண்களின் கலவி வாழ்க்கையில் சிறந்துவிளங்க உதவும். மற்றும் அவைகளை மிகவும் சோர்ந்து, சோம்பிக்கிடக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து சுறுசுறுப்படைய செய்ய இயலும் என்பதாக இந்த பாடல் அமைந்துள்ளது.

இந்த பாடல்களும் அதன் விளக்கமும் சித்தர்கள் பற்றியறிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.
சித்தர்கள் பற்றி கீழ்கண்ட வலைப்பூவில் தோழி தொடர்ந்து பல செய்திகளை மிக எளிய நடையில் பதிப்பித்துவருகிறார்.



Wednesday 7 July 2010

சிந்தனை செய் மனமே!

இந்த செயலை அந்த உண்மையான இறைவன் பரிசுத்த ஏசுவே விரும்பமாட்டார்! இது போன்ற செயலில் ஈடுபடும் என் கிருத்துவ உடன்பிறப்புகளே, குறைந்தபட்சம் உங்கள் மத சேவை அதை ஏற்றுக்கொள்ளும் இறைவனுக்கேனும் பிடித்தவகையில் இருக்கவேண்டும் அல்லவா ? இன்றைய காலகட்டத்தில் இது ஒரு தொழிலாகவே (profession) உருவெடுத்துள்ளது. இங்கு கொரியாவில் அது ஒரு தர்மசங்கடமாகவே உள்ளது கொரியவாழ் வெளிநாட்டவர்க்கு. வாரத்தின் இறுதிநாள் நிம்மதியான உறக்கத்தில் உள்ள நண்பகல் நேரத்தில் ஒலிக்கும் அழைப்பு ம்ணி. உண்மையிலேயே அவர்கள் மிகவும் கணிவானவர்கள், அதனால் தானோ என்னவோ நாம் குறிப்பாய் உணர்த்தும் செய்தியை அவர்கள் உணரவே மாட்டார்கள்.