Monday 19 April 2010

காதல் செய்!







காதல் செய்!

காதல் செய் காதல் செய் !
கண்ணில் பட்டதை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
உன்னில் உள்ளதை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
மஞ்சள் வெய்யிலை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
வெள்ளை மழையை காதல் செய் !

திண்ணை வைத்த வீட்டை சிட்டு குருவி கூட்டை
தாடி வைத்த ஆட்டை காதல் செய் !

வண்ண பூக்கள் தோட்டம் வெள்ளி பனிமூட்டம்
விண்ணில் மேக கூட்டம் காதல் செய் !

வாழும் வாழ்வை காதல் செய் !

போகும் ஊரை நீ காதல் செய் !
காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
கண்ணில் பட்டதை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
உன்னில் உள்ளதை காதல் செய் !

நான் என்ற அகந்தை துளியும் இன்றி
உயர்ந்த மலைகள் கால் மிதித்த இடத்தில்
பாத சுவட்டை அழிக்கும் அலைகள்
மாட்டு கொம்பில் கட்சி பாசம்
டாட்டா காட்டும் குழந்தை நேசம்
காற்றில் வரும் மீன்கள் வாசம்
இதையும் காதலிப்போம்.

காதல் செய் காதல் செய் !






Tuesday 6 April 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பே
காற்று பலமாய் இருக்க
பயந்து விடாதே!
அது தென்றல்தான் - உன்
பிறந்தநாள் வாழ்த்துகூற
வருகிறது சற்றே வேகமாக! என்னைப்போல!


----------------------------------------------------------------------
போட்டியிட்டேன் - நான்
போட்டியிட்டேன்
மரகதப் பூக்கள்
குளிரிளந்தென்றல்
கார்நீல மேகத்துடனும்
போட்டியிட்டேன் !
உன் பிறந்தநாள் வாழ்த்துக் கூற!


----------------------------------------------------------------------
பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை .
தேவையில்லை இந்த கவிதைக்கு!
கவிதைகள் பல நூற்றாண்டு
வாழ்வது - மரபுதானே!



----------------------------------------------------------------------
நண்பா
உன் அருகில் நானிருந்தால்
ஆதவன் கரமுனை தொடுமுன்
என் வாழ்த்துத் தென்றல் தழுவியிருக்கும்!
நானோ இங்கிருப்பதால் - அந்த
ஆதவனிடமே தந்துள்ளேன் - உன்
பிறந்தநாள் வாழ்த்துக்களை!
இன்றுனை முதலில் தழுவிய
கதிரவனின் கதிர்கள் - என் கைகளே!
தமிழ் போல் வாழ்க!
கவிபோல் வாழ்க!


----------------------------------------------------------------------
உன் பிறந்தநாள் கொண்டாட்டம்
கோறுகிறேன் மறுபரிசீலனை!
தோட்டத்து மலர்கள் ஒன்றேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
குளுமையின் உவமை நிலவேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
கவிதைகள்தான் என்றேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
பின் உனக்கு மட்டும் ஏன்?
நீ முழுநிலவில் மலர்ந்த கவிதை என்பதாலோ?
பல்லாண்டு வாழ்க!
பண்பாடு வளர்க்க!


-சக்தி

Friday 2 April 2010

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !


மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

எது ஞாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை !

யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை !

அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய் !
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய் !

கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !