Monday 31 August 2015

காலமானார் கலாம்..!


எளிமையின் உயர்வை 
உணர்த்திய கலாம்!

உழைப்பின் உன்னதத்தை
உரைத்த கலாம் !
அர்பணிப்பின் அற்புதத்தை
காட்டிய கலாம்!

நேர்மையின் உச்சத்தை 
தொட்ட கலாம் !

நல்லிணக்கத்தின் நயத்தை
நவின்ற கலாம் !

மனிதநேயத்தின் மாண்பு 
மேவிய கலாம் !

பாரதியின் அக்கினிகுஞ்சை
சிறகொடு வளர்த்த கலாம் !

வானறிவியல் அணுவியல் 
சுதந்திரம் பெற்ற கலாம் !

மாற்றுநோக்கின் மகிமையை
கனவாலுரைத்த கலாம் !

மாற்றுநோக்கின் மகிமையை 
கனவாலுரைத்த கலாம் !

வல்லரசு கனவை நனவாக்க
பள்ளிகளை களமாக்கிய கலாம் !

கட்சி எல்லையை கடந்து நின்ற
” ’முதல்’ குடிமகன்” கலாம் !

பழந்தமிழ் உயர்நோக்கின் உலககுடிமகனை
அடக்கியாண்டோர் அவையில் அமரச்செய்த கலாம் !

காந்தியின் கனவை மறந்த அன்றைய மாணவர்களே
கலாமின் கனவை நோக்கி வாழ்வீரோ ?

கலாமின் கனவை உணர்ந்த இன்றைய மாணவர்களே
அவர்தம் பாதையில் வாழ விழைவீரோ ?.


ந.சக்தி

No comments: